Posts

Showing posts from October, 2017

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல் பயிர் சாகுபடி முறை

Image
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல் பயிர் சாகுபடி முறை :  இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசலின் பயன்கள் • 25 சதவீதம் பயிர் ஊக்கியாகவும், 75 சதவீதம் பூச்சி விரட்டியாகவும் பயன்படுகிறது • இயற்கை முறையில் பயிர் பாதுகாப்பாகும்.   • இந்தகரைசலின் காரமான நெடியின் காரணமாக பூச்சிகள் பயிர்களை உண்ணாது • பூச்சிகள் முட்டையிடுவது தடுக்கப்படும்   • பூச்சி விரட்டியாகவும், பூஞ்சாண கொல்லியாகவும் பயன்படுத்தலாம்.   • புழுக்களை கட்டுப்படுத்தும் • பழமரங்களைத் தாக்கும் புழுக்கள், வண்டுகளை அழிக்கும் • பூண்டு எண்ணை பயிருக்கு சத்துக்களை அளிக்கும் • சாறு உறிஞ்சும் பூச்சியின் தாக்குதல் இருக்காது • நெல்லில் குலைநோய், பாக்டீரியா வாடல் நோய்களை கட்டுப்படுத்ததும்.   • சுற்று சூழலை பாதிப்பு ஏற்படுத்தாத பாதுகாப்பான பூச்சி கொல்லியாகும்.   இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் ஒரு கிலோ பூண்டு   அரைக்கிலோ இஞ்சி, அரைக்கிலோ பச்சை மிளகாய் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைச...

Kangayam bull matting

Kangayam bull matting

*ஆடு, மாடு, கோழி வளர்ப்பிற்குத் தேவைப்படும் மூலிகைகள்* :

Image
*ஆடு, மாடு, கோழி வளர்ப்பிற்குத் தேவைப்படும் மூலிகைகள்* :   1. வெற்றிலை (கார்த்திகை மாதம் நடவுக்கு ஏற்றது) 2. சோற்றுக்கற்றாழை (குடல் புழு நீக்க) 3. துளசி (நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, சளி நீங்க) 4. சிறியாநங்கை (நிலவேம்பு) - பாம்புகள் வருவதைக் குறைக்க, பாம்புக்கடி மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு(மனிதர்களுக்கு) 5. கற்பூரவள்ளி (சளித்தொல்லை நீங்க) 6. வேம்பு (மரம்)- வரப்பு ஓரங்களில் 7. அகத்தி (மரம்) - வரப்பு ஓரங்களில் 8. சின்ன வெங்காயம் (வெயில் காலங்களில் கோழிகளுக்குக் கொடுக்க) 9. பூண்டு (அம்மை நோய்க்கு கொடுக்கும் மூலிகைக் கலவையில் ஒன்று) 10. சீரகம் (பல நோய்களுக்கு மருந்து) 11. மணத்தக்காளி கீரை(குடல் புண்) 12. பொன்னாங்கன்னி கீரை 13. கறிவேப்பிலை 14. தூதுவளை (சளிக்கு) 15. பிரண்டை 16. நொச்சி

மண்வெட்டி

Image
ஆதித் தமிழர்கள் ஆகிய ஆதி மனிதர்களின் முதல் கருவி மண்வெட்டி ; எளிமையான பெயர் மண்வெட்டி ; மண்வெட்டி என்ற தமிழ்ப் பெயரிலேயே செயலுக்குரிய விளக்கமும் இருப்பது தமிழ் மொழியின் சிறப்புகளில் ஒன்று ; அப்படிப்பட்ட தமிழ் வார்த்தை மணிவெட்டி ; மண்ணை வெட்டப் பயன்படும் வேளாண், தோட்டக் கருவி. மரக் கைப்பிடியுடன் கூடிய மண்வெட்டியில் செவ்வக வடிவிலான உலோகப் பகுதிதான் மண்ணை வெட்டவும் அள்ளவும் உதவும் ; அந்த உலோகம் இரும்பு ; மரக் கைப்பிடியைப் பொருத்த தகட்டின் மேல்புறத்தில் உருளை வடிவில் தட்டையாகவும் சில வேலைகளுக்கு இலேசாக வளைத்தும் தயாரிக்கப்படுகிறது. கைப்பிடியில் பொருத்தும் இடத்தில், மேல்-கீழ் பூண்கள் அமைக்கப்படுவதும் உண்டு ; மணல், ஜல்லியை அள்ளவும் ; வாய்க்கால், வரப்பு வெட்டவும் ; மடையில் வாயை(வாமடை) அடைக்கவும்; களைகளை நீக்கவும் மண்வெட்டி பயன்படுகிறது . மண்வெட்டியில் 1) தட்டை மண்வெட்டி, 2) கொழு மண்வெட்டி, 3) மண்கிளறி மண்வெட்டி, 4) சவள் மண்வெட்டி, 5) மண்வாரி மண்வெட்டி என்ற ரகங்கள் உண்டு ; அந்தந்த பயன்பாடுகளுக்கு ஏற்ப அதனதன் வடிவத்தில் சிறிய மாறுதல்கள் இருக்கும். விவசாயத்திற்கு ...

கற்பூரவல்லி

Image
நீங்கள் காண்பது தென்னைக்கு இடையே நடப்பட்டுள்ள மூன்று ரகமான வாழைகள் ... கற்பூரவல்லி ... மொந்தன் ... கதளி எனப்படும் கேரள ரசதாளி ... இவற்றிற்கு பொதுவானதாக மண்வளம் நீர் ஆதாரம் இருந்தும்... ஒவ்வொன்றும் வித்தியாசமான வளர்ச்சியை பெற்றுள்ளதை படத்தில் பாருங்கள் ... மிகவும் நேர்த்தியாக பருமனாக வந்து சீக்கிரமே வளர்ச்சி கண்டு குலை தள்ளியது கற்பூரவல்லி .. அடுத்து மொந்தன் வாழையும் நன்றாகவே வந்துள்ளது ..கொஞ்சம் தாமதமாக வந்தாலும் ... ஆனால் கேரள ரசதாளி... எல்லாம் இருந்தும் ஏனோ நோஞ்சான் குழந்தைபோல் தண்டு மெலிதாக சின்னதாக ஒரு குலை விட்டுள்ளது ... மண் பரிசோதனை எல்லாம் செய்து அறிவியல் பூர்வமாக என்ன ரகம் நடுவது என்பதை சொல்லிவிட முடியாது ... விவசாயம் என்பது அறிவியல் தாண்டி அனுபவம் தரும் படிப்பினையை வைத்து செய்யப்படுவது ... ஒருவர் பெற்ற அனுபவம் மற்றவர்களுக்கு எளிதாக போய் சேர வேண்டும் ... விதைகள் நன்றாக தேர்ந்தெடுக்காமல் செய்யப்படும் வெள்ளாமை பாதி விளைச்சலை கூட எட்டாது ... உழைப்பையும் தாண்டி கொஞ்சம் விவரமாகவும் ... அடுத்தவர்களிடமிருந்து கற்றுக்கொள்பவராகவும் விவசாயி இருக்க வேண்டும் ...