கற்பூரவல்லி
நீங்கள் காண்பது தென்னைக்கு இடையே நடப்பட்டுள்ள மூன்று ரகமான வாழைகள் ... கற்பூரவல்லி ... மொந்தன் ... கதளி எனப்படும் கேரள ரசதாளி ...
இவற்றிற்கு பொதுவானதாக மண்வளம் நீர் ஆதாரம் இருந்தும்... ஒவ்வொன்றும் வித்தியாசமான வளர்ச்சியை பெற்றுள்ளதை படத்தில் பாருங்கள் ...
மிகவும் நேர்த்தியாக பருமனாக வந்து சீக்கிரமே வளர்ச்சி கண்டு குலை தள்ளியது கற்பூரவல்லி .. அடுத்து மொந்தன் வாழையும் நன்றாகவே வந்துள்ளது ..கொஞ்சம் தாமதமாக வந்தாலும் ...
ஆனால் கேரள ரசதாளி... எல்லாம் இருந்தும் ஏனோ நோஞ்சான் குழந்தைபோல் தண்டு மெலிதாக சின்னதாக ஒரு குலை விட்டுள்ளது ...
மண் பரிசோதனை எல்லாம் செய்து அறிவியல் பூர்வமாக என்ன ரகம் நடுவது என்பதை சொல்லிவிட முடியாது ...
விவசாயம் என்பது அறிவியல் தாண்டி அனுபவம் தரும் படிப்பினையை வைத்து செய்யப்படுவது ...
ஒருவர் பெற்ற அனுபவம் மற்றவர்களுக்கு எளிதாக போய் சேர வேண்டும் ... விதைகள் நன்றாக தேர்ந்தெடுக்காமல் செய்யப்படும் வெள்ளாமை பாதி விளைச்சலை கூட எட்டாது ...
Comments
Post a Comment